எம்பக்க ஆலயம்

  • கம்பளைக் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட எம்பக்க ஆலயம் கண்டி மாவட்டத்தில் உடுநுவர மத்திய பகுதி திக்கெயயில் அமைந்துள்ளது.
  • 14ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த III ஆம் விக்கிரமபாகு மன்னன் காலத்தில் தெல்மட மூலாச்சாரி உட்பட அவரது சீடர்களால் இது நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
  • இது மேளவாத்தியக்காரர் கண்ட கனவு ஒன்றின் பிரதிபலனாக கதிர்காமக் கடவுளுக்கு அர்ப்பணிக்க நிர்மாணிக்கப்பட்டதெனக் கூறப்படுகிறது.
  • வாயில் மண்டபம், நீள்மண்டபம், கர்ப்பக்கிரகம் என்பன எம்பக்க ஆலயத்தில் காணக்கூடிய சிறப்பு அமைப்புகளாகும்.
  • எம்பக்க ஆலய மரத்தூண்களிலும் செதுக்கல் வேலைப்பாடுகளைக் காணலாம்.
  • எம்பக்க தேவாலயத்தின் கூரையில் 26 கை மரங்கள் ஒரு பலகை ஆணியுடன் பொருத்தப்பட்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது “மடொல் குருபாவ” என்று அழைக்கப்படுகிறது. இது இலங்கைக் கட்டக் கலைஞரின் கைவண்ணத்தை எடுத்துக் காட்டுகிறது.
நடுமல் (மடொல் குருபாவ)

வாயில் மண்டபம்

  • 10 தூண்களைக் கொண்டவை
  • ஒவ்வொரு தூணிலும் சதுரங்கள் நான்கு வீதம் உள்ளன. இதற்கேற்ப 10 தூண்களிலும் 40 சதுரங்களில் செதுக்கல்கள் உள்ளன.

நீள் மண்டபம்

  • 32 தூண்களைக் கொண்டவை. ஒவ்வொரு தூணிலும் சதுரங்கள் 4 வீதம் உள்ளன.
  • இங்குள்ள செதுக்கல்களின் எண்ணிக்கை 128 ஆகும்.
  • எம்பக்க தேவாலயத்தின் செதுக்கல்கள் வேங்கை, சித்திரவேம்பு பலகையில் சிறு புடைப்பு முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
  • பிரதானமான 5 கருப்பொருள்களின் கீழ் இச்செதுக்கல்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

1. கற்பனை விலங்கு உருவங்கள்
2.  விலங்கு உருவங்கள்
3.  மனித வாழ்கையுடன் தொடர்புபட்ட செதுக்கல்கள்
4.  கரை அலங்காரம் (லீஸ்தர)
5.  பூக்கள் கொடிகள் அலங்காரம்

  • பாரம்பரியமான சிங்கள அலங்கார வடிவமைப்புக்களில் காணப்படும் சிறப்பான கற்பனை வடிவமைப்புக்களில் பல எம்பக்க ஆலய மரச் செதுக்கல் வேலைப்பாடுகளில் காணப்படுகின்றன.
  • கலைப் பண்புகளைக் கொண்ட கற்பனையான பிராணி மற்றும் ஏனைய பிராணி ஆக்கங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

♦ பேரண்டப்பட்சி / இரு தலைப்பட்சி
♦ கின்னரப்பெண்
♦ யானைப் பட்சி (எற்கந்த லிகினியா)
♦ நாரிலதா
♦ சரபெத்தியா
♦ ரிஷப குஞ்சரம்

பேரண்டப் பட்சி
ரிஸப குஞ்சரம்
கின்னரப் பெண்
அன்னம்
அன்னப்பின்னல்
சிங்கம்
  • எம்பக்க ஆலய செதுக்கல் வேலைப்பாடுகளுள், சிறப்பானவையாகக் கருதப்படுபவை, சமகால சமூக வாழ்க்கை நிகழ்வுகளைக் காட்டும் செதுக்கல்களாகும்.
  • பின்வருவன அவ்வாறானவற்றுள் சிலவாகும்.

♦ றபான் இசைப்பவன்
♦ மல்யுத்தம்
♦ குதிரை வீரன்
♦ நடன மாது
♦ போர் வீரன்
♦ குழந்தைக்குப் பாலூட்டும் தாய்

  • மேற்குறிப்பிட்ட செதுக்கல் படைப்புக்களோடு, கரை அலங்கார வடிவமைப்புக்காக அரும்பு, கல்பித்து, குந்திரிக்கன், போன்ற உயரிய வடிவமைப்புக்களும், தாவர வடிவமைப்புகளும், தாமரைப்பூ, பூங்கொடி போன்றனவும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
தாமரை
செதுக்கல் வடிவமைப்பொன்று
நடனமாது
குழந்தைக்குப் பாலூட்டும் தாய்
மல்யுத்தம்
வெளிநாட்டுப் போர்வீரன்
சுதேச போர்வீரன்
றபான் இசைப்போன்

பயிற்சி வினாக்கள்

1. எம்பக்கத் தேவாலயத்தின் சிற்பங்களினை நிர்மாணித்தவர் யார்?
2. இதன் கூரையமைப்பினது விசேட பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது. அதன் பெயர் யாது?
3. இச்சிற்பங்கள் எவ் முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன?
4. கம்பளை காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட எம்பக்க ஆலயம் எம் மன்னன் அமைக்கப்பட்டது?
5. இவற்றில் கரை அலங்கார வேலைப்பாடுகளுக்காக பயன்படுத்தப்பட்ட அலங்காரங்கள் எவை?

தரப்பட்டுள்ள ஒளிப்படத்தை ஆதாரமாகக் கொண்டு வினாக்களிலுள்ள இடைவெளிகளை நிரப்புக.

  1. 14ஆம் நூற்றாண்டில் 3ம் விக்கிரமபாகு மன்னன் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இது ………………… ………………………………… என அழைக்கப்படுகின்றது.
  2. இக்கட்டடமும் அதிலுள்ள செதுக்கல்களும் ……………………… காலப்பகுதிக்குரியவையாகும்.
  3. இக்கட்டடமானது தென்னிந்திய சிற்பியான …………………………………… நிர்மாணிக்கப்பட்டது.
  4. இங்குள்ள செதுக்கல் வேலைப்பாடுகளுக்காக ………………………… மரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
  5. இக்கட்டடத்தின் கூரையில் 26 மரங்களை ஒன்றிணைத்து …………………………………… என்னும் அமைப்புக் காணப்படுகின்றது.

கீழே தரப்பட்டுள்ள கலை ஆக்கத்தை இனங்கண்டு அதன் கலை அம்சங்களை எடுத்துக்காட்டும் வகையில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள உப தலைப்புகளுக்கேற்ப கருத்துள்ள ஐந்து வாக்கியங்கள் எழுதுக.

1. இனங்காண்க : ………………………………………
2. காணப்படும் இடம் : .…………………………
3. கலைஞனின் திறன் : .…………………….
4. நுட்பமுறை : ………………………………………….
5. உணர்வு வெளிப்பாடு : .……………………

error: Content is protected !!